விழிகள் விழும் பாதையிலே
விரையும் மனிதா நில்
விரையும் மனிதா நில்
குழிகள் நிறைந்த வழியில்
குருதி உறைந்து வீழ்வாய்
பழிகள் விரைந்து படரும்
பகல் உன்மீது உமிழும்
இழிவு சேர்க்க வேண்டம்
இனிய வாழ்க்கை வாழு
தழுவி மகிழ மனைவி
தடைகள் உண்டோ உனக்கு
நழுவிச் சென்று ஏனோ
நடை பாதை நாட்டம்
புழுதி படிந்த புனல்
புரிந்தும் ஏன் தாகம்
கழுவி ஊற்றிய நீரிலுனை
கழுவ ஏன் விருப்பம் ?
எருமை மாடு நீயல்ல
எந்தச் சேற்றிலும் விழுந்தெழும்ப
அருமையாக பகுத்து அறியும்
அறிவைப் பெற்ற பக்கியவன்
பெருமையாக வாழ்வதை விட்டு
பிழையான உறவை நாடி
தெருநாய் போல் திரிந்து
தேடிப் பெறதே எய்ட்ஸை.
கவிதை மலை, மழை,வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு