தெய்வத்
தெரியிழையே!!
தெய்வீக முன்
தெரு
தெட்பத்திலும்
தென்டிப்பேயுன்
தெம்பாங்கு
தெளிவற்ற மூடத்
தெம்பலில் சிக்கியோருக்கு
தெய்வ சகாயம்
தெரியத் தனமாய்
தெய்வமுன்னை
தெரிவு செய்ததோ?
தென்புலம் புறப்பட்ட
தெய்வச் சுரபியேயுன்
தெய்வப் பாதத்தில் சார்த்தப்படும்
தெரியலிது.
நல்ல அருமையான கவிதை,வாழ்த்துக்கள்,இன்னும் தொடருங்கள்.
பதிலளிநீக்கு